CPS தொடர்பாக புதிதாக எவ்வித வழக்கும் இல்லை : எங்கெல்ஸ் !!

☀CPS தொடர்பாக தற்போது புதிதாக வழக்குப் போட்டுள்ளதாகவும், 2 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றப்பட்டதாகவும் எனது பெயரை இட்டு இன்று (19.9.17) சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

☀அத்தகைய எந்த வழக்கையும் தற்போதைக்கு நான் நீதிமன்றத்தில் தொடுக்கவில்லை. இவையாவும் மிகப் பழைய செய்திகள் என்றே கருதுகிறேன்.


☀CPS தொடர்பாக நான் 2012-ல் தொடுத்த வழக்கு இறுதியாக 2.8.2013 அன்று விசாரணைக்கு வந்தது அதன் பின் நாளது தேதிவரை நீதிமன்ற நடைமுறைக்கு வராத சூழலே உள்ளது.

☀எனவே, CPS வழக்கு தொடர்பாக தற்போது சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி, நமது போராட்ட வீச்சினைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்.

☀JACTTO-GEO போராட்டம் தொடர்பான வழக்கிலும், நீதிபதிகளின் கேள்விகள் CPS-ஐ நடைமுறைப்படுத்துதல் சார்ந்தே உள்ளதே அன்றி, CPS-ஐ நீக்கும் நோக்குடையதாக இல்லை.

☀செப்.21-ல் நமது கோரிக்கையை நமது பொறுப்பாளர்கள் மீண்டும் தெளிவுபட நீதிமன்றத்தில் வலியுறுத்துவர்.

☀வழக்கின் போக்கைப் பொறுத்து செப்.22-ல் JACTTO-GEO உயர்மட்டக்குழு அறிவிக்கும் அறிவிப்பிற்காகக் களத்தின் வீரியத்தைக் குறையவிடாது தொடர்ந்து செயல்படுவோம்.

ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! இறுதி வெற்றி நமதே!!!

- திண்டுக்கல் எங்கெல்ஸ்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...