வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!


தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 21

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பிஇ, பிடெக், இளங்கலை அல்லது சிஏ, சிஎஸ், எம்சிஏ, எம்பிஏ போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500/- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 05.07.2018.

மேலும் விவரங்களுக்கு நபார்டு  லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...